சர்க்கரை நோயை குணமாகும் சக்தி வாய்ந்த மருந்து

சர்க்கரை நோயா இனி கவலை வேண்டாம்

சர்க்கரை நோயை குணமாக்கும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து : 

சர்க்கரை நோய் என்பது இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடுகளில் முதலிடம் நமது இந்தியாவுக்கு தான். இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

சர்க்கரை நோய்களுக்கு என ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் அதை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிடும் நிலைமையே இருக்கிறது. ஆனால் நமது தமிழ் மரபு வழி சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மருந்துகள் உள்ளன. 

சித்தர்கள் எழுதிய மருத்துவ குறிப்பேட்டில் உள்ள சர்க்கரை நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கும் முறை :

நன்கு முதிர்ந்த வேப்ப மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை மற்றும் நாவல் பழக்கொட்டை, மாங்கொட்டை பருப்பு ஆகியவற்றை சம எடைகளாக எடுத்துக் கொண்டு அனைத்தையும் உரலில்  போட்டு தூளாக்க வேண்டும். அந்தத் தூளை நன்றாக சலித்து வைத்துக்கொண்டு, ஓரிரு மண்டலங்கள் காலையும் மாலையும் நெய் அல்லது தேனில் ஒரு பாக்கு அளவு எடுத்து குழைத்து உண்டு வரவேண்டும். இந்த மருந்து சாப்பிடும் போது பத்தியம் கடைபிடிக்க வேண்டும். பத்தியமானது செயற்கை இனிப்பு பண்டங்களை உண்ணக்கூடாது. 

மேற்கூறிய மருந்தை உண்டு வருபவர்கள் ஓரிரு மண்டலங்களில் சர்க்கரை நோய் முழுதாக குணமடைந்து வருவதை கண்கூடாக காணலாம்.

உடல் பருமனா?  இனி கவலை வேண்டாம் https://meelpaarvai.blogspot.com/2024/06/blog-post_99.html


Comments

Popular posts from this blog

ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம்

மகப்பேறு அருளும் மாம்பழநாதர்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு