27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள்
சித்தர் வழிபாடு செய்ப்பவர்கள் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் பெருமக்களை வழிபட்டு மேன்மை அடையுங்கள்.
அஸ்வினி:
அசுவினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் காளங்கிநாதர். இவருடைய சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.
பரணி:
பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது. முருகனை தரிசித்து அப்படியே புகாரையும் வழிபட வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும்.
கிருத்திகை:
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் ரோமரிஷி சித்தர். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரடியாக கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என்பதால், இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்.
ரோகிணி:
சித்தர் மச்சமுனி ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் முருகன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் சிறிய மலையின் மேல் உள்ளது.
மிருகசீரிஷம்:
சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி. தென் தமிழத்தில் சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும்.
திருவாதிரை:
சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
புனர்பூசம்:
சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூசம்:
கமல முனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருவாரூர் என்ற ஊரில் உள்ளது.
ஆயில்யம்:
இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் அகத்தியர்
இவருடைய ஒளி வட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது.
சமாதி திருவனந்தபுரத்தில் உள்ளது.
மகம்:
இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.
பூரம்:
இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் அம்சமாக உள்ளார்.
அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவரை வழிபட
வேண்டுமானால் அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.
உத்திரம்:
இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.
அஸ்தம்:
சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
சித்திரை :
சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ
சமாதி உள்ளது.
சுவாதி:
சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
விசாகம் :
சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தரின் ஜீவ சமாதி மாயவரத்திலும் உள்ளது.
அனுஷம்:
சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.
கேட்டை:
சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
மூலம் :
சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
பூராடம்:
சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு
சித்தரே ஆவார்.அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
உத்திராடம் :
சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதியில்
உள்ளது.
திருவோணம் :
இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற
இடத்தில் உள்ளது.
அவிட்டம்:
சித்தர் திருமூலர் ஆவார். இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.
சதயம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர். இவரின் சமாதி எங்கு என தெரியவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
பூராட்டாதி :
இதற்கான சித்தர் சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள் பாலிப்பார்.
உத்திரட்டாதி :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி
கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
ரேவதி :
சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. தனி அறையில் ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி
மன ஒரு நிலைப்பாட்டோடு சித்தரை வணங்கி
வந்தால் போதும்.
Comments
Post a Comment